Saturday, October 17, 2009

தீபாவளி திருநாளா அல்லது தீபா வலி தருநாளா ?

தீபாவளி திருநாளா அல்லது
தீபா வலி தருநாளா ?
நரகாசுரன் இறந்ததை இப்படி
அசுரத்தனமாகத்தான் கொண்டாட வேண்டுமா ?

ஓராண்டு முழுவதும் வாகனங்கள் வெளியிடும் நச்சு புகையை
பட்டாசுகள் வெடித்து இரண்டே நாட்களில் நம் சுற்றுபுறத்தை
நாசப்படுதுவதுதான் தீபாவளி பண்டிகையின் நோக்கமா ?
வெளியே சென்றால் பட்டாசு வெடிச்சத்தம் காதை செவிடாக்கிவிட்டது
. தரையிலும் சத்தம் வானை அண்ணாந்து நோக்கினாலும்
வெடிச்சத்தம் கண்ணை குருடாக்கும் ஒளிவெள்ளம்

வீட்டிற்குள்ளே வந்தால் தொலைகாட்சி பெட்டியில்,
பண்பலையில் அறிவிப்பாளர்கள் ,பேட்டியாளர்கள் ,
பாடல்கள் ,ஆட்டங்கள் ,பட்டி மன்றங்கள் ,
விளம்பரங்கள் ,வன்முறை,மற்றும் விரச காட்சிகளை
கொண்ட திரைப்படங்கள், என நாராசமான கூச்சல்

கேட்கும் சக்தியற்றவர்களே நீங்கள் உண்மையில்
புண்ணியம் செய்தவர்கள் இந்த கொடுமைகளிலிருந்து
தப்பியதற்கு என்றுதான் நினைக்க தோன்றுகிறது

விளக்குகளை வரிசையாக ஏற்றி புத்தாடை உடுத்தி
இறைவனை வணங்கி உறவுகளுடன் உள்ளன்போடு
இனிப்பு வழங்கி பெரியர்வர்களை வணங்கி
ஆசி பெற்று மகிழ்வதை விட்டுவிட்டு

சுற்றுபுறத்தை நச்சு வாயுக்களால் மாசுபடுத்துவதும் ,,
குப்பைகளால் நாட்டையே நிரப்புவதும்

பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மது குடித்து
உடல்நலத்தை அழித்துகொள்வதும்
ஒரு பண்டிகையின் நோக்கமாக இருக்க முடியாது .

இதய நோய் உள்ளவர்களும் , முதியோர்களும் ,
குழந்தைகளும் , சுவாச நோய் உள்ளவர்களும் நோயாளிகளும்,
மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், ஓலை குடிசையில் வாழ்பவர்களும்,,
சிறு ,பிராணிகளும் , பறவைகளும் அடைந்த துன்பத்தை
சிறிதும் கருத்தில் கொள்ளாமல் வெடிகளை வெடித்து
,பல்லாயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கிய
இந்த மக்கள் சமுதாயம் பண்புள்ளவர்கள் , அறிவுள்ளவர்கள் ,
மனித நேயம் கொண்டவர்கள் என்றெலாம்
பீற்றிகொள்வதற்கு எந்தவகையிலும் அருகதையற்றவர்கள்

மகிழ்ச்சி தேவைதான்.
ஆனால் அது .தானும் மகிழுந்து பிறரையும்
மகிழ்விப்பதாக இருக்கவேண்டும்..

இந்த போலியான மகிழ்ச்சி அவர்களுக்கோ அல்லது
இந்த மனித குலத்திர்க்கோ
எந்த நன்மையையும் அளிக்கபோவதில்லை
என்பதை அவர்களுக்கு யார் புரியவைப்பது ?
அசுரனின் அழிவை கொண்டாடுபவர்கள்
பிறருக்கு துன்பம் தந்துதான் அதை
கொண்டாட விரும்புவார்களோ?
சிந்திப்பீர்.

No comments: